டிராக்டர் மோதி வாலிபர் சாவு


டிராக்டர் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 16 Jun 2021 1:16 AM IST (Updated: 16 Jun 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டர் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்

பேரையூர்
பேரையூர் தாலுகாவில் உள்ள குடிசேரியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 35). இவர் பேரையூர்-சாப்டூர் ரோட்டில் கட்டாரபட்டி என்ற இடத்தில் தனது மாட்டுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், பால்பாண்டி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story