ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,270 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,270 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jun 2021 10:11 PM GMT (Updated: 15 Jun 2021 10:11 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 2 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 2 பேர் பலியாகி உள்ளனர்.
1,270 பேருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் 1,295 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். இந்தநிலையில் நேற்றும் ஒரே நாளில் புதிதாக 1,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்து 820 ஆக உயர்ந்தது.
இதில் 67 ஆயிரத்து 734 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 1,639 பேர் குணமடைந்தனர். தற்போது 10 ஆயிரத்து 589 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
2 பேர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டியும், 74 வயது முதியவரும் நேற்று முன்தினம் கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி      உயிரிழந்தார்கள்.  இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 497 ஆக உயர்ந்தது.

Next Story