புதிதாக 144 பேருக்கு கொரோனா; 5 பேர் சாவு


புதிதாக 144 பேருக்கு கொரோனா; 5 பேர் சாவு
x
தினத்தந்தி 21 Jun 2021 4:06 PM GMT (Updated: 21 Jun 2021 4:06 PM GMT)

மதுரையில் புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 பேர் பலியாகினர்.

மதுரை, ஜூன்.
மதுரையில் புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 பேர் பலியாகினர்.
குறைவு
மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 144 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 85 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது.
 இதுபோல் நேற்று 209 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 180 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். குணம் அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.
சிகிச்சையில் இருப்போர்
நேற்றுடன் 69 ஆயிரத்து 617 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 753 ஆக குறைந்துள்ளது. இதனிைடயே நேற்று மதுரையை சேர்ந்த 56 வயது ஆண், 74, 85 வயது முதியவர்கள், 94, 68 வயது மூதாட்டிகள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். 
3 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 2 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது.

Next Story