ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

x
தினத்தந்தி 22 Jun 2021 12:16 AM IST (Updated: 22 Jun 2021 12:16 AM IST)
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை,ஜூன்.
மதுரை எஸ்.ஆலங்குளம் ராமலிங்காநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் லிங்கேஸ்வரி (வயது 34). சம்பவத்தன்று இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று லிங்கேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





