கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

x
தினத்தந்தி 22 Jun 2021 1:00 AM IST (Updated: 22 Jun 2021 1:00 AM IST)
கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,ஜூன்
கள்ளிக்குடி அருகே உள்ள இலுப்பங்குளத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 21). கட்டிட தொழிலாளியான இவர் 17 வயதே ஆன இளம்பெண்ணை கடத்திச் சென்று தஞ்சாவூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இது குறித்து அந்த இளம்பெண்ணின் தாய் கள்ளிக்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் தஞ்சாவூர் சென்று அவர்கள் இருவரையும் கள்ளிக்குடிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளி நாகராஜை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





