மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

x
தினத்தந்தி 22 Jun 2021 1:09 AM IST (Updated: 22 Jun 2021 1:09 AM IST)
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
பேரையூர்,ஜூன்.
டி.கல்லுப்பட்டி அருகே மதிப்பனூர் பெரிய ஓடையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக நாகையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது பெரிய ஓடையில் இருந்து ஒரு டிராக்டரில் மணல் அள்ளி கொண்டுவரும்போது போலீசாரை பார்த்தவுடன் டிராக்டரை டிரைவர் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
உடனே போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து நாகையாபுரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மதிப்பனூரை சேர்ந்த ஒச்சு என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





