ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2021 1:32 AM IST (Updated: 23 Jun 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தானில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சோழவந்தான்,

சோழவந்தான் வட்டபிள்ளையார்கோவில் அருகில் பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ஜோதி ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் ஜெனகை மாரியம்மன் ஆட்டோ தொழிலாளர் சங்க பொருளாளர் புகழேந்தி, துணைத்தலைவர் சுரேஷ் மற்றும் மணிகண்டன் உள்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
1 More update

Next Story