மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது
சோழவந்தானில் மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சோழவந்தான்,
இதுகுறித்து மணி சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சங்கங்கோட்டை சேர்ந்த மருதுபாண்டி (32) என்பவர் தன்னுடைய கூட்டாளியுடன் மினிபஸ் மற்றும் டிராக்டரில் உள்ள பேட்டரி, கார்செட் மற்றும் ஒலிபெருக்கியை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து மருதுபாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story