படப்பை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்


படப்பை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்
x
தினத்தந்தி 23 Jun 2021 2:36 AM GMT (Updated: 23 Jun 2021 2:36 AM GMT)

படப்பை அருகே வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.

படப்பை, 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சரபேந்திரராஜன் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் முத்துராஜா (வயது 22).

இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் மயான சாலை லட்சுமி நகர் விரிவு பகுதியில் தங்கியிருந்து கடந்த 6 மாதங்களாக ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் முத்துராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் வேலைக்கு வரவேண்டாம் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளும்படி கூறி சொந்த மாவட்டத்துக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இநத நிலையில் முத்துராஜா நேற்று காலை முதல் உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்தார். அறையில் தங்கியிருந்த அவரது நண்பர் வனமுத்து மூலமாக சாலமங்கலம் பகுதியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து, மாத்திரை வாங்கி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டின் பின்பக்கம் உள்ள வேப்பமரத்தில் முத்துராஜா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story