லாரி மோதி அரசு ஊழியர் பலி

x
தினத்தந்தி 24 Jun 2021 1:35 AM IST (Updated: 24 Jun 2021 1:35 AM IST)
லாரி மோதி அரசு ஊழியர் பலியானார்.
பேரையூர்,ஜூன்.
சேடப்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 56). திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆலம்பட்டி-சேடபட்டி சாலையில் எஸ்.மீனாட்சிபுரம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத லாரி, மணிவண்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





