பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி


பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 23 Jun 2021 11:19 PM GMT (Updated: 23 Jun 2021 11:19 PM GMT)

பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி ஆனார்.

பெருந்துறை
பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி ஆனார். 
போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்
ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் ரவி (வயது 56). இவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்ெ்தாடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
கொரோனா
அதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது   கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று ரவி பரிதாபமாக இறந்தார். 
இறந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Next Story