தெங்குமரஹடா வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க சென்ற தன்னார்வலர்கள் ஜீப் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது


தெங்குமரஹடா வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க சென்ற தன்னார்வலர்கள் ஜீப் காட்டாற்று  வெள்ளத்தில் சிக்கியது
x
தினத்தந்தி 24 Jun 2021 4:49 AM IST (Updated: 24 Jun 2021 4:49 AM IST)
t-max-icont-min-icon

தெங்குமரஹடா வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க சென்ற தன்னார்வலர்கள் ஜீப் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.

பவானிசாகர்
தெங்குமரஹடா வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க சென்ற தன்னார்வலர்கள் ஜீப் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.
பழங்குடியின மக்கள்
பவானிசாகர் வனப்பகுதியில் மாயாற்றின் கரையில் நந்திபுரம், பூதிகுப்பை, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. அங்கு 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள இந்த கிராமங்களுக்கு அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் மாயாற்றை கடந்து பரிசலில் தான் செல்ல முடியும். 
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வன கிராம பகுதிக்கு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் வன கிராம பழங்குடியின மக்கள் தேவையான மளிகை பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். 
வெள்ளத்தில் சிக்கியது
இந்தநிலையில் சத்தியமங்கலம் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் சிவக்குமார், பறவைகள் ஆராய்ச்சியாளர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையிலான தன்னார்வலர்கள் இணைந்து மளிகை பொருட்கள் வழங்க முடிவு செய்தனர். அதன்படி 310 பழங்குடியின குடும்பங்களுக்கு பருப்பு, மாவு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்குவதற்காக வனகிராமங்களுக்கு அவர்கள் ஜீப்பில் சென்றார்கள். அப்போது மாயாற்றில் செந்நிறத்தில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியது. 
அந்த வெள்ளத்தில் ஜீப்பை அதன் டிரைவர் லாவகமாக ஓட்டி சென்றார். அப்போது மறுகரையை அடையும்போது ஜீப் திடீரென ஆற்றின் நடுவே நின்றது. உடனே டிரைவர் விரைந்து செயல்பட்டு சமயோசிதமாக மீண்டும் ஜீப்பை இயக்கி நிவாரண பொருட்களை பத்திரமாக கொண்டு சென்று சேர்த்தார். இதைத்தொடர்ந்து வன கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பழங்குடியின மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர்.

Next Story