நகை, வெளிநாட்டு பணம் திருட்டு

x
தினத்தந்தி 24 Jun 2021 11:28 PM IST (Updated: 24 Jun 2021 11:28 PM IST)
வீட்டின் கதவை உடைத்து நகை, வெளிநாட்டுப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை,ஜூன்
மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, 500 அமெரிக்கன் டாலர், 13 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





