வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது

x
தினத்தந்தி 25 Jun 2021 1:02 AM IST (Updated: 25 Jun 2021 1:02 AM IST)
வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அலங்காநல்லூர்,ஜூன்.
மதுரை பாலமேடு அருகே உள்ள ராமக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தவமணிராஜா (வயது 23). இவர் ஊருக்கு அருகில் தனது ஆட்டு கொட்டத்தில் இரவு தங்கி இருந்தார். அப்போது அங்கு வந்த சிலரை தவமணி ராஜா தடுத்து நிறுத்தி விசாரித்தார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் தவமணிராஜாவை வெட்டினர். இது பற்றிய புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி சத்திர வெள்ளாளபட்டியை சேர்ந்த பிரசாந்த் (26) அதே ஊரை சேர்ந்த கார்த்திக் (21), சந்தோஷ் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





