கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2021 7:36 PM GMT (Updated: 24 Jun 2021 7:36 PM GMT)

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

நாகமலைபுதுக்கோட்டை,
ஜூன் 
நாகமலைபுதுக்கோட்டை போலீசார் ரோந்து சென்ற போது கீழக்குயில்குடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கீழக்குயில்குடியைச் சேர்ந்த சேதுபதிராஜா (வயது 57) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வசந்தி கஞ்சா விற்ற சேதுபதிராஜாவை கைது செய்தார். அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story