ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று; முதியவர் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று; முதியவர் பலி
x
தினத்தந்தி 24 Jun 2021 9:09 PM GMT (Updated: 24 Jun 2021 9:09 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 641 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
641 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் 641 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 872 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 75 வயது முதியவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 21-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
முதியவர் பலி
இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந்தேதி முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 565 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 994 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 80 ஆயிரத்து 984 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 4 ஆயிரத்து 965 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story