திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 169 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 169 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2021 4:56 AM GMT (Updated: 25 Jun 2021 4:56 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 169 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 674 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 866 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,682 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 8 பேர் இறந்துள்ளனர்.

Next Story