மதுரை,
மதுரை காஜிமார் தெருவை சேர்ந்தவர் முகமதுகான் (வயது 28). இவரும் புதூரை சேர்ந்த 24 வயது பெண்ணும் நண்பர்களாக இருந்தனர். பின்னர் அந்த பெண்ணை முகமதுகான் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டது. இதையடுத்து அந்த பெண் முகமதுகானிடம் பேசி பழகுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமதுகான் அந்த பெண்ணை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுகானை கைது செய்தனர்.