ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பெண்கள் பலி; புதிதாக 530 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பெண்கள் பலி; புதிதாக 530 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 28 Jun 2021 3:46 AM IST (Updated: 28 Jun 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பெண்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 530 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பெண்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 530 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
530 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் தமிழக அளவில் பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2 -வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 530 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 88 ஆயிரத்து 215 ஆக உயர்ந்தது.
4 பெண்கள் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா தொற்று காரணமாக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந் தேதி மூதாட்டி இறந்தார்.
மேலும் கொரோனாவுக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி மற்றும் 50 வயது பெண் கடந்த 20-ந் தேதியும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி கடந்த 24-ந் தேதியும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 583 ஆக உயர்ந்தது.
மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 715 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 83 ஆயிரத்து 312 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். தற்போது தொற்று உள்ள 4 ஆயிரத்து 320 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
1 More update

Next Story