வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி


வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி
x
தினத்தந்தி 29 Jun 2021 1:36 AM IST (Updated: 29 Jun 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தானில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சோழவந்தான்,ஜூன்
சோழவந்தான் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 41). வங்கியில் பணியாற்றி வரும் இவர் கடந்த 26-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டி மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். அதில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். நேற்று ஊர் திரும்பிய சண்முகநாதன் கொள்ளை முயற்சி நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சோழவந்தான் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story