சேலையில் தீப்பிடித்து பெண் பலி


சேலையில் தீப்பிடித்து பெண் பலி
x
தினத்தந்தி 29 Jun 2021 4:32 PM GMT (Updated: 29 Jun 2021 4:32 PM GMT)

சேலையில் தீப்பிடித்து பெண் பலியானார்.

அலங்காநல்லூர்,ஜூன்
அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 60). இவர் தனது வீட்டின் வெளியே விறகு அடுப்பில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜம்மாவின் சேலையில் தீப்பற்றியது. பின்னர் உடலில் தீ பரவியதால் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story