ஆடு திருடிய வாலிபர் சிக்கினார்

x
தினத்தந்தி 2 July 2021 12:57 AM IST (Updated: 2 July 2021 12:57 AM IST)
ஆடு திருடிய வாலிபர் சிக்கினார்
அலங்காநல்லூர்,ஜூலை.
மதுரை பாலமேடு அருகே வெள்ளையம்பட்டி பகுதியில் நேற்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் மதுரை மேலமடையைச் சேர்ந்த சிவக்குமார் (வயது21) என்பதும், ஆடு திருடியவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 3 திருட்டு ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தார். மேலும் அவருடன் வந்த 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





