மோட்டார்சைக்கிளுக்கு தீ வைப்பு


மோட்டார்சைக்கிளுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 2 July 2021 1:06 AM IST (Updated: 2 July 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமங்கலம்,ஜூலை
திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 34). வார்டு உறுப்பினராக இவர் வீட்டிற்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் அந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீ வைத்த மர்ம நபர் குறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கோகுல்ராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story