மதுரையில் மின்சாரம் தாக்கி பிளஸ்1 மாணவன் பலி

x
தினத்தந்தி 2 July 2021 1:11 AM IST (Updated: 2 July 2021 1:11 AM IST)
மதுரையில் மின்சாரம் தாக்கி பிளஸ்1 மாணவன் பலியானார்.
மதுரை, ஜூலை.
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் ஹரி நித்திஷ் (வயது 15), பிளஸ்-1 மாணவன். சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் டியூசனுக்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற மின்கம்பியை அவர் எதிர்பாராத விதமாக தொட்டதாக கூறப்படுகிறது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஹரிநித்திஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





