பஸ் மோதி வாலிபர் சாவு


பஸ் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 5 July 2021 1:08 AM IST (Updated: 5 July 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

பஸ் மோதி வாலிபர் சாவு

வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே சி.புதூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30). கார்டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு சமயநல்லூர் அணுகுசாலையில் நடந்து சென்றார். அப்போது மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ் தினேஷ்குமார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப-்இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story