ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 311 பேருக்கு கொரோனா தொற்று


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 311 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 6 July 2021 10:20 PM GMT (Updated: 6 July 2021 10:20 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 311 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 311 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
311 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 330 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 311 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்து 64 ஆக உயர்ந்தது.
தொடர்ந்து 2-வது இடம்
எனினும் தமிழக அளவில் கோவை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 302 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 86 ஆயிரத்து 570 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 609 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 3 ஆயிரத்து 885 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story