தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- கரும்புகள், வாழைகள் சேதம்


தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- கரும்புகள், வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 7 July 2021 3:51 AM IST (Updated: 7 July 2021 3:51 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் கரும்புகள், வாழைகள் சேதமானது.

தாளவாடி
தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் கரும்புகள், வாழைகள் சேதமானது.
8 யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்தநிலையில் தாளவாடி அடுத்த கெட்டவாடியை சேர்ந்த இளங்கோ (வயது 42) என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு யானைகள் புகுந்தன. அங்கு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு, வாழை ஆகிய பயிா்களை இளங்கோ சாகுபடி செய்து உள்ளார். இந்த தோட்டத்துக்குள் புகுந்த 8 காட்டு யானைகள் கரும்பு, வாழை பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. 
அகழி அமைக்க கோரிக்கை
இதுபற்றிய சத்தம் கேட்டு எழுந்து பார்த்த விவசாயி இளங்கோ, யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு திரண்டு வந்து ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானைகளை வனத்துக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன. இதில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்பு, 500 வாழைகள், 50 தென்னை மரங்கள் சேதமானது. யானைகள் தொடர்ந்து விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். எனவே யானைகளால் சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்துக்குள் யானைகள் புகாத வகையில் அகழி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
1 More update

Next Story