ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று- 2 பேர் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று- 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 July 2021 4:11 AM IST (Updated: 9 July 2021 4:11 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
251 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 288 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 91 ஆயிரத்து 108 ஆக உயர்ந்தது.
2 பேர் பலி
இதற்கிடையில் கொரோனாவுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 86 வயது மூதாட்டி மற்றும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது முதியவர் ஆகியோர் கடந்த 3-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 611 ஆக உயர்ந்தது.
மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 241 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 87 ஆயிரத்து 67 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 3 ஆயிரத்து 430 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
1 More update

Next Story