ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று- ஒருவர் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று- ஒருவர் பலி
x
தினத்தந்தி 9 July 2021 9:38 PM GMT (Updated: 9 July 2021 9:38 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
230 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் 9 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 251 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 91 ஆயிரத்து 168 ஆக உயர்ந்தது.
ஒருவர் பலி
எனினும் தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருகிறது. இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 57 வயது ஆண் ஒருவருக்கு பரிசோதனையின்போது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 21-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந்தேதி அவர் இறந்தார்.இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 612 ஆக உயர்ந்தது.
மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 241 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 87 ஆயிரத்து 314 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 3 ஆயிரத்து 242 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story