செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 144 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 144 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 12 July 2021 5:25 AM GMT (Updated: 12 July 2021 5:25 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 220 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 479 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுவரை 2 ஆயிரத்து 373 பேர் உயிரிழந்துள்ளனர். 1,368 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 885-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 69 ஆயிரத்து 182 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,194-ஆக உயர்ந்துள்ளது. 509 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story