நகை பறிக்க முயற்சி

x
தினத்தந்தி 14 July 2021 12:52 AM IST (Updated: 14 July 2021 12:52 AM IST)
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
மதுரை, ஜூலை
மதுரை கீரைத்துறை வேதபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அமுதவள்ளி (வயது 28). இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் அமுதவள்ளி கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். அவர் சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் திருடனை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த திருடன் தப்பி ஓடி விட்டான். இது குறித்து கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை பறிக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





