‘தொண்டர்கள் மனக்குமுறலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது’ சசிகலா பேச்சு


‘தொண்டர்கள் மனக்குமுறலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது’ சசிகலா பேச்சு
x
தினத்தந்தி 14 July 2021 2:16 PM GMT (Updated: 14 July 2021 2:16 PM GMT)

‘தொண்டர்கள் மனக்குமுறலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது’ சசிகலா பேச்சு.

சென்னை,

சசிகலா தினந்தோறும் தொலைபேசியில் தொண்டர்களுடன் பேசி வருகிறார். சேலத்தை சேர்ந்த ஜெகதீசன், ராஜா, மதுரையை சேர்ந்த கேசவ பாண்டியம்மாள், சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன், நாகையை சேர்ந்த சுப்ரமணியன், திருவள்ளூரை சேர்ந்த சாகுல் அமீது ஆகியோருடன் சசிகலா நேற்று பேசினார்.

அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.வை சரிபண்ணி நல்லபடியாக கொண்டுவந்துடலாம். கவலையே படாதீங்க. கட்சிக்கு நிச்சயம் தலைமை ஏற்பேன். தொண்டர்கள் என்னை தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று சொல்றீங்க. இதுக்காகவே நான் கட்டாயம் வந்துடுவேன். பெங்களூருவில் இருந்தே வரும்போது, ஒற்றுமையா இருந்து தேர்தலை சந்திங்க. அதுதான் நல்லதுனு சொன்னேன். அதை அவங்க கேக்கல. ஆட்சியை இழந்துட்டோம்.

இப்போ தொண்டர்கள் மனக்குமுறல் அதிகமாக இருக்கு. இனிமேலும் இதை பார்த்துட்டு சும்மா இருக்கமுடியாது.

கட்சியை நல்ல நிலைமைக்கு கொண்டு போகணும்.அதுக்காகவே விரைவில் வந்துடுவேன்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

Next Story