அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

x
தினத்தந்தி 15 July 2021 12:31 AM IST (Updated: 15 July 2021 12:31 AM IST)
அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
மதுரை
மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 49), அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் செல்லூர் ரோட்டில் பஸ்சை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி பஸ் மீது இடித்தது. இதுகுறித்து ஜெயக்குமார், லாரி டிரைவரிடம் கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது லாரி டிரைவர் தாகாத வார்த்தைகளால் ஜெயக்குமாரை திட்டி, இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான பரவையை சேர்ந்த சுல்தான்சிக்கந்தர்(34) என்பவரை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





