மின்சாரம் தாக்கி விவசாயி பலி


மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 17 July 2021 2:26 AM IST (Updated: 17 July 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

வாடிப்பட்டி
சமயநல்லூர் அருகே தோடனேரி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 47). விவசாயி. இவர், வயலுக்கு மின்மோட்டார் போட்டு தண்ணீர் பாய்ச்சினார். பின்னர் மின்மோட்டாரை நிறுத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்மந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story