நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 18 July 2021 7:59 PM GMT (Updated: 18 July 2021 7:59 PM GMT)

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

மதுரை
மதுரை பசுமலை  துணை மின்நிலையத்தில் நிலையூர் பீடரில் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்வயர்களை உரசும் மரக்கிளைகளை வெட்டும் பணி நாளை( செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவி நகர்,  கிருஷ்ண நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், செரூப், பெரியார் நகர், மல்லிகை காடன், அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், அருள் நகர், அவர் லேடி பள்ளி, காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர் பகுதி, துரைச்சாமி நகர் பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மதுரை மேற்கு பெருநகர் அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Next Story