ஜவுளிக்கடையில் திருட்டு


ஜவுளிக்கடையில் திருட்டு
x
தினத்தந்தி 19 July 2021 8:32 PM GMT (Updated: 19 July 2021 8:34 PM GMT)

மதுரையில் ஜவுளிக்கடையில் திருட்டு நடைபெற்றது.

மதுரை,

மதுரை அண்ணாநகர் கிழக்கு குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 50). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான ஜவுளி பொருட்களை திருடி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த கோபிநாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story