தாய் திட்டியதால் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை


தாய் திட்டியதால் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை
x
தினத்தந்தி 19 July 2021 9:12 PM GMT (Updated: 19 July 2021 9:12 PM GMT)

கியாஸ் சிலிண்டர் வாங்க மாட்டியா? என தாய் திட்டியதால் விரக்தி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாடிப்பட்டி,

கியாஸ் சிலிண்டர் வாங்க மாட்டியா? என தாய் திட்டியதால் விரக்தி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாய் திட்டினார்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூரில் வசித்து வருபவர் குமார் (வயது 40) கொத்தனார். இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு சரவணன் என்ற மகனும் ஜான்சிராணி(14) என்ற மகளும் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று குமார் கட்டிட வேலைக்கு சென்று விட்டார்.
அதன்பின் சரோஜா அங்கு உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டு வாசலில் சிலிண்டர் விற்பனையாளர் சிலிண்டர் வாங்க வீட்டில் யாரும் இல்லையா? என்று கேட்டார். வீட்டில் மகள் இருக்கிறாள்.
அவள் வாங்கவில்லையா? என கூறிய சரோஜா தனது மகள் ஜான்சி ராணியை கூப்பிட்டு கியாஸ் சிலிண்டர் வாங்க மாட்டியா? என திட்டி உள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அதன்பிறகு கியாஸ் புத்தகம் எடுத்து வந்து ஜான்சி ராணி சிலிண்டர் வாங்கி வைத்து உள்ளார். பின்னர் சரோஜா வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்று மாடுகளுக்கு தண்ணீர் கொடுத்து கொண்டு இருந்தார்.
தன்னை தாய் திட்டியதால் மனவேதனை அடைந்த ஜான்சிராணி வீட்டின் உள்ளறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் இந்த விபரீத முடிவை அறிந்த அவரது தாய் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
 இது குறித்து சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story