பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 19 July 2021 9:25 PM GMT (Updated: 19 July 2021 9:26 PM GMT)

மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

மதுரை,

மதுரை வண்டியூர் பொன்விநாயகர் தெருவை சேர்ந்தவர் அருண்ராஜ். இவருடைய மனைவி சியாமளா (வயது 29).சம்பவத்தன்று சியாமளா அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நடந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சியாமளா அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story