புதிதாக 15 பேருக்கு கொரோனா


புதிதாக 15 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 July 2021 7:27 PM GMT (Updated: 22 July 2021 7:27 PM GMT)

விருதுநகரில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

விருதுநகர், ஜூலை.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 34 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து இதுவரை 44 ஆயிரத்து 497 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாக வில்லை. 
நேற்றைய நிலவரப்படி 309 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகளில் 210 பேரும், சிகிச்சை மையங்களில் 12 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story