செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை


செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 22 July 2021 9:28 PM GMT (Updated: 22 July 2021 9:28 PM GMT)

செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்துகொண்டாா்.

சென்னிமலை
சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி ஊராட்சி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் தனுஜா (வயது 15). இவர் பசுவபட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெறுவதால் தனுஜாவுக்கு அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்து உள்ளனர். 
ஆனால் தனுஜா அடிக்கடி முகநூல் மற்றும் வாட்ஸ் அப் பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக அவருடைய பெற்றோர் தனுஜாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. 
இதனால் தனுஜா மனமுடைந்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டார். உடனே தனுஜாவை அவருடைய பெற்றோர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story