நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 July 2021 10:37 PM GMT (Updated: 22 July 2021 10:38 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 46 ஆயிரத்து 648 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,650 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,702 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று 102 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 45 ஆயிரத்து 539 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 438 பேர் இறந்து விட்ட நிலையில், மீதமுள்ள 725 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story