காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை


காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 July 2021 1:39 AM IST (Updated: 24 July 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வி.கைகாட்டி:

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 48). இவர் கயர்லாபாத் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள சிமெண்டு ஆலைகளில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் சர்க்கரை நோயாலும், காலில் ஏற்பட்ட காயத்தின் வலியாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக டாக்டர்களிடம் அருள்ஜோதி சிகிச்சை பெற்றும் காயம் சரியாகவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு அருள்ஜோதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 More update

Next Story