திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது

x
தினத்தந்தி 25 July 2021 8:46 AM IST (Updated: 25 July 2021 8:46 AM IST)
உத்திரமேர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன் மற்றும் விஜயகாந்த் உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதியில் கண்காணித்து வந்தனர். உத்திரமேரூர் அடுத்த பழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 44) மானாமதி கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (36) இருவரும் திருட்டுத்தனமாக அரசு மதுபாட்டில்களை விற்றதால் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





