ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
x
தினத்தந்தி 27 July 2021 10:40 PM GMT (Updated: 27 July 2021 10:40 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
புதிதாக 132 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 918 பேருக்கு பரிசோதனை செய்ததில் 127 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் 132 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 93 ஆயிரத்து 78 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 208 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 91 ஆயிரத்து 38 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். தற்போது தொற்று உள்ள 1,410 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
2 பேர் பலி
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயது பெண் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 18-ந்தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 20-ந்தேதி இறந்தார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 66 வயது ஆண் கொரோனா தொற்று ஏற்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி கடந்த 20-ந் தேதி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்தது.

Next Story