படப்பை அருகே லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு


படப்பை அருகே லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
x

படப்பை அருகே லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் நேற்று காஞ்சீபுரம் பகுதியில் இருந்து எம். சேண்ட் ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை சிவா (வயது 45) ஒட்டி வந்தார். லாரி படப்பை பகுதியில் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது. லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் சிவா காயம் அடைந்தார். லாரியில் இருந்த எம்.சேண்ட் சாலையில் சிதறியது.

இது குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் சாலையில் கொட்டிய எம்.சேண்டை அப்புறப்படுத்தி லாரியை கிரேன் மூலம் அகற்றினர். இந்த விபத்து காரணமாக வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story