முன் விரோதத்தில் தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு
முன் விரோதத்தில் தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருமங்கலம்,ஆக.
திருமங்கலம் குதிரைசாரிகுளத்தில் முருகன் என்பவர் கிரில் கேட் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு நேற்று இரவு முருகனின் தம்பி முத்து (வயது 44) மற்றும் இவரது 14 வயது மகன் ஆகியோர் கடையில் இருந்தனர். அப்போது 2 பேர் அங்கு வந்து எங்கள் வீட்டுக்கு கேட் அமைக்க வேண்டும், அளவு எடுக்க வருமாறு கூறி முத்துவையும், அவரது மகனையும் அழைத்துச் சென்றனர்.
தருமத்துப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, அங்கு மறைந்திருந்த 5 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென அரிவாளால் முத்துவையும், அவரது மகனையும் வெட்டினர். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தபோது மர்ம கும்பல் தப்பிச் சென்று விட்டனர்.
பின்னர் படுகாயம் அடைந்த 2 பேரையும் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story