சிவகிரி அருகே மரத்தில் கார் மோதி வடமாநில தொழிலாளி சாவு- 3 பேர் காயம்


சிவகிரி அருகே மரத்தில் கார் மோதி வடமாநில தொழிலாளி சாவு- 3 பேர் காயம்
x
தினத்தந்தி 2 Aug 2021 9:25 PM GMT (Updated: 2 Aug 2021 9:25 PM GMT)

சிவகிரி அருகே மரத்தில் கார் மோதி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.

சிவகிரி
சிவகிரி அருகே மரத்தில் கார் மோதி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் காயம் அடைந்தனர். விபத்து
வடமாநில தொழிலாளி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கானல் புதூரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 19). இவரின் தம்பி ஹரிபிரசாத் (17). உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராகுல் வர்மா, சிவா. இவர்கள் 4 பேரும் பொள்ளாச்சி பகுதியில் தனி தனியாக தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனர்.
சம்பவத்தன்று இவர்கள் 4 பேரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு காரில் பொள்ளாச்சி சென்று கொண்டிருந்தனர். காரை கோபிநாத் ஓட்டினார்.
விபத்தில் சாவு
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள உச்சிமேடு பகுதியில் நேற்று காலை 6 மணி அளவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் ரோட்டோரம் உள்ள புளியமரம் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
காரை ஓட்டி வந்த கோபிநாத் மற்றும் ஹரிபிரசாத், சிவா, ராகுல் வர்மா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ராகுல் வர்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
காயம்
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ராகுல் வர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்த கோபிநாத், ஹரிபிரசாத், சிவா ஆகியோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story