விபசாரம்; புரோக்கர்கள் 2 பேர் சிக்கினர்


விபசாரம்; புரோக்கர்கள் 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 4 Aug 2021 1:29 AM IST (Updated: 4 Aug 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

விபசாரம் தொடர்பாக புரோக்கர்கள் 2 பேர் சிக்கினர்

மதுரை,ஆக
மதுரை பெத்தானியாபுரத்தில் வீட்டை வாடகைக்கு பிடித்து விபசாரம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கரிமேடு போலீசார் அந்த வீட்டை கண்காணித்த போது அங்கு விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் செல்லூர் கீழவைத்தியநாதபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து(வயது 35), உசிலம்பட்டியை சேர்ந்த சதீஷ்(36) என்பதும், அவர்கள் விபசார புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 23 வயது பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
1 More update

Next Story