சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை
x
தினத்தந்தி 7 Aug 2021 8:45 PM GMT (Updated: 7 Aug 2021 8:45 PM GMT)

சீனாபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனையானது.

பெருந்துறையை அடுத்து உள்ள சீனாபுரத்தில் மாட்டுச் சந்தை கூடியது. இந்த சந்தைக்கு, தர்மபுரி மாவட்டம் கேசரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாய்க்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மோர்ப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் கொண்டுவரப்பட்டது.  
 இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரத்துக்கும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரத்துக்கும் விற்பனையானது. சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரத்துக்கும், இதே வகை கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. எருமைமாடு ஒன்று ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்பனை ஆனது. 
இந்த சந்தையில் மாடுகளின் விற்பனை ரூ.1 கோடிக்கு மேலாக நடந்தது என்று சந்தை நிர்வாகிகள் கூறினர். 
 பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, குன்னத்தூர், திங்களூர், காஞ்சிக்கோவில், பூந்துறை, அறச்சலூர், சென்னிமலை, வெள்ளோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் மாடுகளை பிடித்து சென்றனர்.

Next Story