மூதாட்டியிடம் நகை பறிப்பு

x
தினத்தந்தி 11 Aug 2021 1:06 AM IST (Updated: 11 Aug 2021 1:06 AM IST)
ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை,ஆக.
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவருடைய மனைவி ரேணுகாதேவி (வயது 62). இவர், அண்ணா நகர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், ரேணுகா தேவியின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச்சென்றார். நகை பறிக்கும் போது தவறி விழுந்ததில் ரேணுகாதேவி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து ரேணுகாதேவி அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





